Saturday 26 December 2015

ஆருத்ரா தரிசனம் நடராஜர், சிவகாமி அம்மாள்.


ஆருத்ரா தரிசனம் ஒரு சிறப்பு பதிவு:

ஆருத்ரா தரிசனம் ( உணர்த்தும் உண்மை – ஈசன் திருவருளால் )
( # உற்றவனை உணர்ந்து தரிசிக்க வேண்டி # )
நமசிவாய
ஆனந்த கூத்தன் அடிமைகள் பாதம் பணிகிறேன்
ஆருத்ரா தரிசனம் என்ற நடராஜபெருமான் தரிசனத்தின் உணர்த்துவது குறித்த விளங்கவே இப்பதிவு.
ஏதோ ஆருத்ரா தரிசனம் என்று சொன்னார்கள் கூட்டத்தோடு சென்று அபிஷேகம் பார்த்து தீபாராதனை பார்த்து நம் வேண்டுதலை சொல்லி பயன்பெறுவோம் என்ற எண்ணத்தில் தான் பலர் செல்கிறார்கள்.
என்ன மற்ற நாளில் அபிஷேகம் பார்த்து தீபாராதனை பார்த்து நம் வேண்டுதலை சொல்லி பயன்பெற முடியாத?
வேண்டுதலை சொல்லித்தான் பெறவும் வேண்டுமோ ?
புராணம் சொல்லும் நிகழ்வு :
தருகவனத்தில் உள்ள முனிவர்கள் “கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என நாத்திகம் பேசி வந்தனர். அவர்களது அறியாமையை நீக்கிட வந்த சிவப்பெருமான் தனக்கு எதிராக ஏவிவிடப்பட்ட யானையை தனது ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகப் பூண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழி திருவாதிரை.
நாம் உணரவேண்டிய உண்மை :
என் செயலால் நடக்கிறது,
என் வேண்டுதலால் கிட்டிய பலன்,
நான் செய்த தர்மத்தின் பலன்,
நான் இந்த தெய்வத்தை எல்லாம் தொழுததால் கிட்டிய செல்வம்,
என் பதவி, என் பொருள், என் பணம். என் பிள்ளைகள், என் சொந்தம்
என்றும் மிக சிறிய வட்டத்துள் சுழன்றுகொண்டு, அன்றாட தேவைகளை கருத்தில் கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறோம்.
நம் மீது மாபெரும் கருணைக்கொண்டு நம்மிடம் உள்ள நான் என்ற எண்ணத்தையும், என்னுடையது என்ற எண்ணத்தையும் அழித்து அந்த ஆணவத்தை தம் காலில் மிதித்து கொண்டு
இதற்கும் மேலானவன் இருக்கிறான், இதற்கும் மேலான இன்பம் இருக்கிறது, என்று உணர்த்தும் தரிசனமே ஆருத்ரா தரிசனம்.
ஆருத்ரா தரிசனம் செய்யும்போது நம்பெரும் அழகை கிழ்கண்டவாறு சிந்தித்தவண்ணம் தரிசித்து பாருங்கள் .
பணித்த சடைகொண்டு உலகியல் வாழ்வில் சிக்குற செய்து.
வளரும் பிறைகொண்டு நம்மை இன்புற குளிர்வித்து
நீர் தரித்த நெற்றியில் நின் படைப்புகள் குறித்த சிந்தையுடன்
மூடிய முன்றாவது கண் கொண்டு நம்மை மேலும் சிறப்புற வாழ்விக்கும் சிந்தை மேலோங்க.
குனித்தபுருவமுடன் கூடிய கண் கொண்டு நம்மை எப்பொதும் கண்காணித்த வண்ணம்.
நாம் உலகியல் இன்பத்தை அனுபவித்து ஆடும் ஆட்டங்களை புன்முறுவலுடன் ரசித்தவண்ணம்.
நமக்கு வரவிருக்கும் துன்பத்தை பாம்பாக மாற்றி நம்மை அணுகவிடாமல் தம் மீது சூடிக்கொண்டு
உன் வாழ்வில் இதற்கும் மேலான நிலையை நீ அடையவேண்டும் அதையெல்லாம் அருளும் கரத்துடன் அருளி
என்னால் முடியாது என்ற எண்ணத்தை உன்னுள்ளே வராமல் இருக்கு அவற்றை மறுகையால் புறம் தள்ளிவிட்டு.
மாயா மயக்கத்தில் உள்ளவனை உடுக்கை ஒலிகொண்டு தெளிவித்து.
இருளிய வாழ்கையில் கையில் உள்ள நெருப்பு கொண்டு ஒளிவித்து.
மேல்கூறிய வற்றை சிந்தித்தவண்ணம் காணும்போது ஆனந்த கூத்தனை நாம் மீது கொண்ட கருணையை உணர்விர்கள்.
அப்போது உங்கள் சிந்தையில் உன்னை எல்லாவிதத்திலும் வாழ்வித்து உன்னை மேலும்மேலும் உயர்த்த நான் ஒருவனே இருக்கேன் என்றும் உணர்த்தும் தரிசனமே ஆருத்ரா தரிசனம்.
மேல்கூறிய கருத்து ஈசன் திருவருளால் மட்டுமே தோன்றியது
திருச்சிற்றம்பலம்
உற்றவனை உணரவேண்டி
உற்றவன் திருவருளால்
அடியேன்!!!


நடராஜர் பத்து :
பாடல்:1
மண்ணாதிபூதமொடு விண்ணாதி அண்டம் நீ, மறை நான்கின் அடிமுடியும் நீ,
மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ, மண்டலம் இரண்டேழும் நீ,
பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ, பிறவும் நீ, ஒருவன் நீயே,
பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ, பெற்ற தாய் தந்தை நீயே,
பொன்னும் நீ, பொருளும் நீ, இருளும் நீ, ஒளியும் நீ, போதிக்க வந்த குரு நீ,
புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ, இந்த புவனங்கள் பெற்றவனும் நீ,
எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே என் குறைகள் யார்க்கு உரைப்பேன்,
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(அனைத்துமாகி நின்ற நடராஜரைப் போற்றுவதாக அமைந்தது.)
பாடல் : 2
மானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட, மறை தந்த பிரம்மனாட,
கோனாட வானுலகக் கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட,
குண்டலம் இரண்டாட, தண்டைபுலி உடையாட, குழந்தை முருகேசனாட,
ஞான சம்பந்தரோடு இந்திரர் பதினெட்டு முனி அட்ட பாலகருமாட,
நரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட,
வினையோட உனை பாட, எனை நாடி இதுவேளை, விருதோடு ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் 3:
கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி,
காற்றென்ற மூவாசை மாருதச் சூழலிலே கட்டுண்டு நித்தம் நித்தம்
உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி ஓயாமல் இரவு பகலும்
உண்டுண்டு உறங்குவதைக் கண்டதே யல்லாது ஒரு பயனடைந்திலனே!
தடமென்ற இடி கரையில் பந்தபாசங்களெனும் தாபமாம் பின்னலிட்டு
தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இது வண்ணமாய்
இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுன் அழகாகுமோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(மனித வாழ்வின் சிக்கல்களை நீக்க வேண்டி பாடுவதாக அமைந்தது)
பாடல் : 4
வம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல
பாதாள அஞ்சனம் பரகாய பிரவேசம் அதுவல்ல ஜாலமல்ல
அம்பு குண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல
அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அரிய மோகனமுமல்ல
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரமரிஷி கொங்கணர் புலிப்பாணியும்
கோரக்கர் வள்ளுவர் போகமுனி இவரெலாம் கூறிடும் வைத்தியமல்ல
என்மனது உன்னடி விட்டு விலகாது நிலைநிற்கவே உளது கூறவருவாய்
ஈசனேசிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(மாந்த்ரீகம், சித்தர்கள் பற்றி கூறியுள்ள பாடல்)

பாடல் 5:
நொந்து வந்தேனென்று ஆயிரம் சொல்லியும் செவியென்ன மந்தமுண்டோ
நுட்பநெறி அறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ
சந்ததமுன் தஞ்சம் என்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ
தந்திமுகன் அறு முகன் இருபிள்ளை இல்லையோ தந்தை நீ மலடுதானோ,
விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே,
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே வேடிக்கை இதுவல்லவோ 
இந்த உலகீரேழும் ஏனளித்தாய் சொல்லு இனி உன்னை விடுவதில்லை 
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(நிந்தா ஸ்துதியில் அமைந்த பாடல்)

பாடல் 6:
வழிகண்டு உன்னடியை துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதிலும்
வாலாயமாய் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த பொதிலும்
மொழி எதுகை மோனையும் இல்லாமல் பாடினும்
மூர்க்கனேன் முகடாகினும் மோசமே செய்யினும்
தேசமே கவரினும் முழுகாமியே ஆகினும் பழியெனக் கல்லவே தாய்தந்தைக்
கல்லவோ
பார்த்தவர்கள் சொல்லார்களோ பாரறிய மனைவிக்கு பாதியுடல் ஈந்த நீ
பாலகனை காக்கொணாதோ எழில்பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ
என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(குறைகளற்ற வாழ்வை பெற வேண்டுவதாக அமைந்த பாடல்)

பாடல் : 7
அன்னை தந்தைகள் எனை ஈன்றதர்க்கு அழுவனோ, அறிவிலாததற்கு அழுவனோ
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக் கழுவனோ
முன்பிறப்பென்ன வினை செய்தேன் என்றழுவனோ என் மூட அறிவுக்கு அழுவனோ
முன்னில் என் வினை வந்து மூளும் என்றழுவனோ முத்தி வருமென்று
உணர்வனோ
தன்னை நொந்தழுவனோ உன்னைநொந்தழுவனோ தவமென்னஎன்றழு வனோ
தையலர்க்கு அழுவனோ மெய்வளர்க்க அழுவனோ தரித்திர திசைக்கழுவனோ இன்னுமென்ன பிறவி வருமோ என்றழுவனோ எல்லாம் உரைக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(முக்தியை வேண்டுவதாக அமைந்த பாடல்)
பாடல் : 8
காயாமுன் மரமீது பூ பிஞ்சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டனோ
கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்தனோ கிளை வழியில் முள்ளிட்டனோ
தாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தனோ தந்த பொருள் இல்லை
யென்றனோ
தானென்று கர்வித்து கொலை களவு செய்தனோ தவசிகளை ஏசினேனோ
வாயாரப் பொய் சொல்லி வீண்பொருள் பறித்தனோ வானவரை பழித்திட்டனோ
வடவுபோல் பிறரை சேர்க்காது அடித்தனோ வந்தபின் என்செய்தேனோ
ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ எல்லாம் பொறுத் தருளுவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(செய்த பாபங்களை நீக்க வேண்டிய பாடல்)


பாடல் 9 :
தாயார் இருந்தென்ன தந்தையும் இருந்தென்ன தன் பிறவி உறவுகோடி
தனமலை குவித்தென்ன கனபெயர் எடுத்தென்ன தாரணியை ஆண்டுமென்ன
சேயர்கள் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன சீடர்கள் இருந்தும் என்ன,
சித்து பல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன, நதிகளெல்லாம்
ஓயாது மூழ்கினும் என்ன பலன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ இதுவெல்லாம் சந்தை உறவென்று தான் உன்னிரு பாதம் பிடித்தேன்.
யார் மீது உன் மனமிருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
பாடல் 10 :
இன்னமும் சொல்லவோ உன் மனம் கல்லோ இரும்போ பெரும் பாறையோ 
இருசெவியும் மந்தமோ கேளாது அந்தமோ இது உனக்கழகு தானோ
என் அன்னை மோகமோ இதுவென்ன சாபமோ, இதுவே உன்
செய்கைதானோ
இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவனோ
உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனையடுத்துங்
கெடுவனோ,
ஓஹோ இது உன்குற்றம்என்குற்றம் ஒன்றுமில்லை உற்றுப்பார் பெற்ற ஐயா
என் குற்றமாயினும் உன் குற்றமா யினும் இனியருள் அளிக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் : 11
சனி ராகு கேது புதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரியன் இவரை,
சற்றெனக்குள்ளாக்கி ராசி பனிரெண்டையும் சமமாய் நிறுத்தி யுடனே
பணியொத்த நட்சத்திரங்களிருபத்தேழும் பக்குவப்படுத்திப் பின்னால்,
பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும் வெட்டிப் பலரையும் அதட்டி
என்முன் கனிபோலவே பேசி கெடுநினைவு நினைக்கின்ற கசடர்களையுங்
கசக்கி,
கர்த்தநின் தொண்டராம் தொண்டர்க்கு தொண்டரின் தொண்டர்கள் தொழும்பனாக்கி சிறுமணவை முனுசாமி பாடியவை இசைக்கும் எமை அருள்வது இனியுன் கடன் காண்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

Friday 25 December 2015

பத்தாவது நாள் மாணிக்கவாசகர் விழா .

திருவெம்பாவை பாடல் 9:
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்
அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.
பொருள்: கோடி வருடங்களுக்கும் முற்பட்ட பழமையான பொருள் இது என்று சொல்லப்படும் பொருட்களுக்கெல்லாம் பழமையானவனே! இன்னும் லட்சம் ஆண்டுகள் கழித்து இப்படித்தான் இருக்கும் இந்த உலகம்என்று கணிக்கப்படும் புதுமைக்கெல்லாம் புதுமையான சிவனே! உன்னை தலைவனாகக் கொண்ட நாங்கள், உனது அடியார்களுக்கு மட்டுமே பணிவோம். அவர்களுக்கே தொண்டு செய்வோம். உன் மீது பக்தி கொண்டவர்களே எங்களுக்கு கணவராக வேண்டும். அவர்கள் இடும் கட்டளைகளை எங்களுக்கு கிடைத்த பரிசாகக் கருதி, மிகவும் கீழ்ப்படிதலுடன் பணி செய்வோம். இந்த பிரார்த்தனையை மட்டும் நீ ஏற்றுக் கொண்டால், எங்களுக்கு எந்த குறையும் இல்லை என்ற நிலையைப் பெறுவோம்.